உலகம்

ஈரான் மீதான தாக்குதல் உத்தரவை வாபஸ் வாங்கிய டிரம்ப்?

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துவிட்டு பிறகு தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெற்றதாக அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் உத்தரவை வாபஸ் வாங்கிய டிரம்ப்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியதாக சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதனிடையே ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல் தீ பிடித்து எரிந்தது. இதில் 2 எண்ணெய் கப்பல் பலத்த சேதம் அடைந்தது. இதற்கு ஈரான் தான் காரணமாக இருக்கவேண்டும் என அமெரிக்க சந்தேகத்தை கிளப்பிவிட்டது.

ஈரான் மீதான தாக்குதல் உத்தரவை வாபஸ் வாங்கிய டிரம்ப்?

அதனை நிரூபிக்கும் வேலையில் அமெரிக்க ராணுவம் வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் ஈரான் ராணுவ வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஒரு படகில் சென்று ஜப்பானின் எண்ணெய் கப்பல் அருகே ‘லிம்பெட்’ வகை கடல் கண்ணிவெடிகளை எடுக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ குறித்து ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில் கூடுதலாக 1,000 வீரர்களை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. மேலும், இன்று ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ஈரானின் ஏவுகணைகள் கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் இந்த தாக்குதலுக்கு டொனால்டு டிரம்பும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, தாக்குதலுக்கு தயாரான நிலையில், டொனால்டு டிரம்ப் திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பின்வாங்கியதாக நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஈரானால் சுடப்பட்ட அமெரிக்க உளவு விமான பாகங்களின் புகைப்படங்களை அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories