வைரல்

‘கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்’ -எடப்பாடி அரசை தோலுரித்துக் காட்டும் ‘வைரல்’ போட்டோ!

கனமழை பெய்த போது குடைபிடித்தப்படி ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்’ -எடப்பாடி அரசை தோலுரித்துக் காட்டும் ‘வைரல்’ போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கனமழையாக வலுத்து கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கனமழையின் போது, ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, டிரைவர் சீட் மேலிருந்து நதி கொட்டுவது போல் மழைநீர் கொட்டிக் கொண்டிருந்தது.

பேருந்தை இயக்கிக் கொண்டிந்த டிரைவர், திடீரென்று கையில் குடையை பிடித்துக் கொண்டு ஒரு கையால் பேருந்தை இயக்கிச் சென்றார்.

இதைக்கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதை படம் எடுத்த பயணி ஒருவர் இணையத்தில் வைரலாக்கி உள்ளார். இதுமட்டுமல்லாமல், பேருந்தின் மேல்புறத்தில் ஆங்காங்கே இருந்த ஓட்டைகளில் இருந்து மழைநீர் ஒழுகி, அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் தலைகளிலும் கொட்டியிருக்கிறது.

‘கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்’ -எடப்பாடி அரசை தோலுரித்துக் காட்டும் ‘வைரல்’ போட்டோ!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்படும், அரசு பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை உடைச்சலாக ஒழுகும் நிலையில் உள்ளதாக பயணிகள் கொதிப்புடன் தெரிவிக்கின்றனர்.

கனமழையின்போது, குடைபிடித்து டிரைவர் பேருந்தை இயக்கிய நேரத்தில், விபத்து ஏற்பட்டிருந்தால் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமோ?

மக்கள் உயிரை காவு கேட்கும் எடப்பாடி அரசின் யோக்கியதையை அரசு பேருந்துகளை வைத்து பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories