தமிழ்நாடு

கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?

கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு ஏற்பட்டு 40 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அஜிஸ்கான் என்ற நபர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த சக வீரர்கள் அவரை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அஜிஸ்கானைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தாரால் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories