
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெறும் நிலையில், இந்திய அளவில் முதலாவதாக #electionresult2026 என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெருநகரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
“சமூக அமைதியும், சட்ட ஒழுங்கும் உறுதிப்படுத்தப்படும்” என பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் நம்பிக்கை அளிக்கப்பட்டது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
234 தமிழ்நாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
மொத்தம் 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, அதன் பிறகு EVM வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.






