Tamilnadu

🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை: குப்பையில் இருந்து மின்சாரம் - கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள்!

“தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகள், வெளியிடப்படும் அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள ‘கலைஞர் செய்திகள்’ இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.”

🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை: குப்பையில் இருந்து மின்சாரம் - கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
22 January 2026, 05:23 AM

திருப்பூர் மேம்பாட்டிற்கு தனிகவனம்!

திருப்பூரில் குப்பை கொட்டுவதற்காக அதிமுக ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான், நெருப்பெரிச்சல் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள குப்பைகளை பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் ஒவ்வொரு பிரச்சனையும் தனித்தனியாக கவனித்து தீர்வு காண திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாயப் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, ரயில்வே பிரச்சனை என அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் தனிகவனம் செலுத்தி, நகரத்தை முற்றிலும் மேம்படுத்தி வருகின்றோம்.

- அதிமுக எம்.எல்.ஏ கே.என். விஜயகுமாருக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்!

22 January 2026, 05:07 AM

குப்பையில் இருந்து மின்சாரம்!


சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரிலும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயாராக உள்ளது. – சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தகவல்!

22 January 2026, 05:07 AM

22 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளோம்!

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 22 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சீறிய முயற்சியால் சென்னையையொட்டிய பகுதிகளில் உள்ள 8,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விடுபட்ட மக்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!”

– சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!

22 January 2026, 05:06 AM

குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை!

“தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திராவிட மாடல் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குற்றங்களை குறைத்து சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சிறைச்சாலைகளை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, குற்றம் இழைத்தவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கி நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. எனவே கலசப்பாக்கத்தில் உள்ள சிறைச்சாலை தற்போது அவசியமில்லை.”

– சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தகவல்!

22 January 2026, 04:40 AM

கோவில்பட்டியில் ஆய்வு மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

22 January 2026, 04:16 AM

ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்!

ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

22 January 2026, 04:13 AM

கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. - அமைச்சர் கே.என்.நேரு

22 January 2026, 04:06 AM

தமிழ்நாடு சட்டமன்றம் 3வது நாள் அமர்வு தொடக்கம்!


தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

22 January 2026, 03:56 AM

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வில், ஆளுநர் ஆர்.என். ரவி, வழக்கமான மரபின்படி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்குகிறது.

banner

Related Stories

Related Stories