தமிழ்நாடு

திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!

பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் தனது பிறந்த நாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி - நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து,ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!

பின்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கட்டப்பட்ட ஆதிக்கக் கோட்டையினை சுயமரியாதை கருத்துகளால் தகர்த்த 'ஈரோட்டு பூகம்பம்' தந்தை பெரியார் அவர்களின் நினைவிடம் சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மேலும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்ய அயராது உழைப்போம் என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories