சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.