தமிழ்நாடு

'நீங்க ரோடு ராஜாவா’ - குறும்படம் வெளியிட்ட சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை - முழு விவரம் என்ன ?

இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்துள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

'நீங்க ரோடு ராஜாவா’ - குறும்படம் வெளியிட்ட சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை - முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’நீங்க ரோடு ராஜாவா’ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படம் மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் follow traffic rules காணொளி வெளியிடப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன், “ நீங்க ரோடு ராஜாவா என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறேன். பொதுமக்களுக்கு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க விழிப்புணர்வு வேண்டும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் அவர்கள் கூறினார். அதன்படி பொது மக்களுக்கு புரியும் வகையில் இந்த நீங்க ரோடு ராஜாவா என்ற குறும்படத்தை இயக்கி காட்சிபடுத்தியுள்ளேன்.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்த போக்குவரத்து காவல்துறைக்கு நன்றி. என்னை என்னுடைய குடும்பத்தினர் ஐ.பி எஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்று தான் ஆசை பட்டனர். ஆனால் நான் திரைத்துறைக்கு வந்துவிட்டேன். தற்போது திரைத்துறை மூலம் என்னுடைய பங்களிப்பு காவல்துறை அளித்ததன் மூலம் பெருமை அடைகிறேன்” என்றார்

'நீங்க ரோடு ராஜாவா’ - குறும்படம் வெளியிட்ட சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை - முழு விவரம் என்ன ?

அதனைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், “மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும்,, மக்களுக்கு புரிய வைப்பதற்காக தான் இந்த குறும்படம் எடுத்துள்ளோம். இதை இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்திருந்தோம். அதற்கு அவர் தெரிவித்த பதில் என்னுடைய தாயார் காவல் ஆய்வாளர், நான் காவல் நிலையத்தில் வளர்ந்தவன் என தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து அவரே முழு ஆர்வம் எடுத்து பல நடிகர்களை நடிக்க வைத்து பிரித்தேயேகமாக குறும்படத்தை தயாரித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இந்தியாவிலேயே சாலை விபத்து மூலம் ஏற்படும் மரணத்தை குறைத்துள்ளோம்,, சென்னை மாநகரத்தில் சாலை விபத்து குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு 566 வழக்கு பதிவு செய்யப்பட்டது, 573 பேர் உயிரிழந்தனர். 2022ல் 500 வழக்கு பதிவு, 508 உயிரிழப்பு ஏற்பட்டது. 2023 ல் 499 வழக்கு பதிவு செய்யபட்டு 504 உயிரிழப்பு இருந்தது. தலைகவசம் அணியாமல் 2021 ல் 279 ஆக இருந்த உயிரிழப்பு 2023 ல் 196 ஆக 38% குறைந்துள்ளது என்றார், மேலும் wrong route பயணம் செய்தது தொடர்பாக இந்தாண்டு 60181 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தான் விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. 'நீங்க ரோடு ராஜாவா’ என்பதை போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருபவர்களை போட்டோ எடுத்து காவல் துறை இணையதளத்தில் பதிவு செய்யுங்கள் நாங்கள் மூவாயிரம் காவல் துறையினர் இருக்கின்றோம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories