தமிழ்நாடு

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை.. அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை சார்பில் 22 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை..  அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் 22 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1. இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

2. ஏற்காடு நிலச்சீரமைப்பு காட்சிமுனை, உள்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளுடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

3. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரான தரங்கம்பாடியில் பல்வேறு சுற்றுலா வசதிகள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும்.

4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு புதிய காட்சிமுனைகள் அமைத்தல் மற்றும் தற்போதைய காட்சி முனைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

5. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பழங்கால சமணத் தலங்களில் ஒன்றான சித்தன்னவாசல் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை..  அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?
சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை..  அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?

6. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

7. இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் வழிகாட்டிச் சுற்றுலாக்கள் நடத்தப்படும்.

8. தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும்.

9. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமான அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் நுழைவு வளாகம், வாகன நிறுத்துமிடம், வழிகாட்டுப் பலகை, மின் வாகனங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.

10. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை சாகசச் சுற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

11. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டல ஏரிப் பகுதியில் பார்வையாளர் மாடம், நடைபாதைகள், இருக்கைகள், மின்விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.

12. முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப் பகுதியை, கடற்கரைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் சாகச விளையாட்டுகள், நடைபாதைகள், பறவைகள் பார்வையிடுவதற்கு மாடம் மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை..  அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?
சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை..  அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?

13. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அரித்ரா நிதி கோயில் குளம், படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

14. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

15. செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மாமல்லபுரம் கடற்கரை ஓய்வு வளாகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ரூ.20 கோடியில் அதிநவீன மாநாட்டு அரங்கம் கட்டப்படும்.

16. மதுரையில் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு அலகு 2 கூடுதல் விருந்து மண்டபங்கள் ரூ.7 கோடியில் கட்டப்படும்.

17. இராமஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் ரூ.7 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

18. திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.2.80 கோடி செலவில் 43 இருக்கைகளுடன் கூடிய இரண்ட குளிர்சாதன பேருந்துகள் வாங்கப்படும்.

19. ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்த ஒலி, ஒளி காட்சி பொது தனியார் பங்களிப்பில் அமைக்கப்படும்.

20. நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதி, தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து சாகச விளையாட்டுகள், பார்வையாளர் மாடம் மற்றும் மலர் பூங்கா போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

21. ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள படகு இல்லங்களில் மிதவை உணவகங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ரூ.15 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

22. கன்னியாகுமரியை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை ரூ.1 கோயில் தயாரிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories