தமிழ்நாடு

திருமணம் நடந்த 3-வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தூத்துக்குடி அருகே கோயில் ஆற்றில் விழுந்து புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் நடந்த 3-வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மூத்த மகன் பழனிகுமார். இவருக்கும் முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்தவர் ராமையாவின் மகள் முத்துமாரிக்கும் கடந்த 10ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து புதுமண தம்பதிகள் நேற்று வீட்டின் அருகே இருந்த கோயிலுக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் பல மணி நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கேஅவர்கள் இல்லை.

திருமணம் நடந்த 3-வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

பின்னர் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அடுத்த நாள் காலை கோயில் குளத்தில் இருவரது உடலும் மிதந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் புதுமண தம்பதிகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடந்த 3-வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கோயில் குளத்தைச் சுற்றி வரும் போது தம்பதிகள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடந்த மூன்றாவது நாளில் கோயில் ஆற்றில் விழுந்து புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories