தமிழ்நாடு

“இலவச 100 யூனிட் மின்சாரம் தொடரும்.. கோடை காலத்தில் மின் தடை இருக்காது” : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

“எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் உண்டு எந்த மாற்றமும் இல்லை.” என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

“இலவச 100  யூனிட் மின்சாரம் தொடரும்.. கோடை காலத்தில் மின் தடை இருக்காது” : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை கழகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச நூறு யூனிட் மின்சாரம் வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய விவசாயிகள் மத்தியில் திமுக அரசு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

“இலவச 100  யூனிட் மின்சாரம் தொடரும்.. கோடை காலத்தில் மின் தடை இருக்காது” : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

மேலும் தற்போது 18,000 மெகாவாட் தேவை அதிகரிக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சரி செய்வதற்கு, தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இதுவரை வரலாற்றில் இல்லாதது மூன்று மாதங்களுக்கு தேவையான 1,562 மெகாவாட் இந்த மூன்று மாதங்களில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் மின்சாரம் தடைப்படாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மின் தடை இந்த கோடைகாலத்தில் ஏற்படாது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

“இலவச 100  யூனிட் மின்சாரம் தொடரும்.. கோடை காலத்தில் மின் தடை இருக்காது” : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு டெல்டா பகுதிகளில் 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சார வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார். கோடை காலம் வந்தாலும் விவசாயிகளுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சார வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. சில பகுதிகளில் அதிகாரிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும் மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

“இலவச 100  யூனிட் மின்சாரம் தொடரும்.. கோடை காலத்தில் மின் தடை இருக்காது” : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது. 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பணிகளை தி.மு.க ஆட்சி செயல்படுத்தி வருவதாகவும் அடுத்த ஆண்டு கோடை காலம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

“இலவச 100  யூனிட் மின்சாரம் தொடரும்.. கோடை காலத்தில் மின் தடை இருக்காது” : அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் மின் உற்பத்திக்கு தேவையான 11 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார் . டெண்டர் விடுவதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் எட்டு ரூபாய்க்கு பெற முடியும் எனவும் இவ்வாறு பெறாமல் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெற்றால் 12 முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட்டுக்கு மின்சாரம் செலவு ஏற்படும் எனவும் டெண்டர் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார்

தமிழகத்தின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 2030க்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மின்வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இரு வாரங்களில் ஒப்பந்தம் முடிவு பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories