தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவரம் : போலிஸ் மீது கல்வீசி காவல் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர்கள் அதிரடி கைது !

கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது போலிஸ் மீது கல்வீசிய இளைஞர் மற்றும் போலிஸ் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் : போலிஸ் மீது கல்வீசி காவல் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர்கள் அதிரடி கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் : போலிஸ் மீது கல்வீசி காவல் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர்கள் அதிரடி கைது !

இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் போலிஸார் தீவிரப்படுத்தினர். இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கலவரம் பரவ காரணமாக இருந்த வாட்ஸ்அப் குழுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலவரம் : போலிஸ் மீது கல்வீசி காவல் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞர்கள் அதிரடி கைது !

இந்த நிலையில், பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்‌ , சங்கராபுரம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த‌ நவீன்குமார்‌ , மேலும் போலிஸ் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய கா.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிவர்மா மற்றும் போலிஸார் மீது கற்கள் வீசி தாக்கிய பின்னல்வாடி கிராமத்தை சேர்ந்த முருகன் ‌ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், சொத்துக்களை சேதப்படுத்தியதோடு அங்கிருந்து சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாக சங்கராபுரம் தாலுகா செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories