தமிழ்நாடு

வீட்டில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட குணசீலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு வேதவர்ஷினி என்ற 6 வயது மகள் இருந்தார்.இவர் தனியால் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்த மின்சார கம்பியைப் பிடித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியுள்ளது. இதைப்பார்த்து சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories