தமிழ்நாடு

தலையை பிடித்துக்கொண்டு விழுந்தவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியடைந்த கடைக்காரர் - CCTV காட்சியால் பரபரப்பு!

இனிப்பகம் ஒன்றில் இனிப்பு வாங்கிக் கொண்டிருந்தவர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையை பிடித்துக்கொண்டு விழுந்தவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியடைந்த கடைக்காரர் - CCTV காட்சியால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இனிப்பகம் ஒன்றில் இனிப்பு வாங்கிக் கொண்டிருந்தவர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரியில் இனிப்பகம் ஒன்றில் இனிப்பு வாங்கிக் கொண்டிருந்த ராஜா என்பவர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜா என்பவர் புவனகிரியில் உள்ள இனிப்பகம் ஒன்றில் கடை இனிப்பு வாங்கி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். திடீரென தலை வலி ஏற்பட்டவர் போல தலையைப் பிடித்துக்கொண்டே கீழே விழுந்தவர் மூர்ச்சையாகியுள்ளார்.

இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென கீழே விழுந்தவர் இறந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories