தமிழ்நாடு

உலகிலேயே அதிக விலை கொண்ட மரம் தமிழகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு; அதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

அரபு நாடுகளில் அதிக விலை கொண்ட வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள அகர் மரங்கள் தமிழகத்திலேயே இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே அதிக விலை கொண்ட மரம் தமிழகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு; அதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அனைத்து மரங்கள் மற்றும் அரிய வகை தாவரங்கள் வளர கூடிய காலநிலை கொண்ட தொகுதியாக உள்ளது. இந்த நிலையில் கூடலூரை அடுத்துள்ள நாடுகானி பகுதியில் பலநூறு ஏக்கர் கணக்கில் தாவரங்கள் மரங்கள் ஆய்வு செய்யும் ஜீன்பூல் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.

இங்கு இலட்சக்கணக்கான அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் மரங்களை ஆய்வு செய்து வரும்போது அங்கு பணிபுரிந்து வரும் வனச்சரகர் பிரசாந்த் அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அரபு நாடுகளில் அதிக மணம் கொண்ட அகர் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 அகர் மரங்கள் காய்களுடன் இருப்பதை கண்டுபிடித்தார்.

உலகிலேயே அதிக விலை கொண்ட மரம் தமிழகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு; அதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

இந்த மரமானது நன்கு முற்றிய நிலையில் அந்த மரக்கட்டைகள் மூலம் இந்த வாசனை திரவியங்கள் எடுக்கப்படும் எனவும் ஒரு கிலோ மரக்கட்டை 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை விலை போவதாகவும் தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள மரமாகவும் இந்த மரம் கருதப்படுவதாக தெரிவித்தார். இதில் தயாரிக்கப்படும் வாசனை திரவியம் கோடிக்கணக்கில் விலை போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இந்த 2 மரம் தற்போது ஜீன்பூல் தாவரவியல் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தற்போது அதில் காய்கள் நிறைய உள்ள நிலையில் அந்த காய்கள் மூலம் அதிக அளவிலான மரங்களை நட முடிவு செய்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories