தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படத்தை மாட்டி ரகளை.. ஊழியர்களை மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி கைது : பின்னணி என்ன?

கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்த பா.ஜ.க.வினர் மோடியின் புகைப்படத்தை மாட்டி அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பிய பா.ஜ.க நிர்வாகியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படத்தை மாட்டி ரகளை.. ஊழியர்களை மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி கைது : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பா.ஜ.க அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பா.ஜ.கவினர், அலுவலகத்திற்குள் மோடியின் படத்தை மாட்டினர்.

இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும் மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர்.

இதனால் பா.ஜ.க.வினருக்கு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் மோடியின் புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பா.ஜ.கவினர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அத்துமீறி அரசு அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை ஆலாந்துறை காவல்துறையினர் அதிகாலையில் கைது செய்து, காலை 5 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories