தமிழ்நாடு

போதையில் 8வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் பலி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்!

மது போதையில் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

போதையில் 8வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் பலி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துவந்தார். மேலும் செம்பரம்பாக்கத்தில் 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடியில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கி கல்லூரிக்குச் சென்றுவந்தார்.

இந்நிலையில், அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி இருக்கும் நண்பரின் பிறந்தநாளை கேக் வெட்டி நண்பர்கள் கொண்டாடியுள்ளனர். அப்போது அனைவரும் மது குடித்துள்ளனர்.

இதையடுத்து,அறையில் அதிகமாக நண்பர்கள் இருந்ததால் பிரவீன்குமார் தனது அறைக்குச் செல்லாம் என நினைத்துள்ளார். அப்போது, அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்துள்ளது. அவர் அதிகமாகக் குடித்தால் போதையிலிருந்துள்ளார்.

இதனால் பிரவீன்குமார், அறைக்கு வெளியே இருக்கும் பைப்பை பிடித்து தனது அறைக்குச் சென்றுவிடலாம் என நினைத்து இறங்கியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து நண்பர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories