தமிழ்நாடு

மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!

ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களை வஞ்சிக்கும்  ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்களுக்கு எதிரான சட்டங்களையே கொண்டுவந்துள்ளது. குறிப்பாக புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற சட்டங்களை அமல்படுத்தி மக்களை வஞ்சித்து வருகிறது.மேலும் விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புப் கொடி ஏந்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை அன்பகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதேபோல், சென்னை சிஐடி காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.

மக்களை வஞ்சிக்கும்  ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!
மக்களை வஞ்சிக்கும்  ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!
மக்களை வஞ்சிக்கும்  ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!
மக்களை வஞ்சிக்கும்  ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் அண்ணா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.

இதேபோல் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.முக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மக்களை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டது தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories