தமிழ்நாடு

பெண் கொடுக்காத ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற இளைஞர் : நெல்லை அருகே நடந்த கொடூரம் !

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி அருகே காதல் விவகாரத்தில் 8 மாத குழந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொடுக்காத ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற இளைஞர் : நெல்லை அருகே நடந்த கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்தவர்கள் ஆனந்த செலின் - ஏஞ்சலின் தம்பதியினர். இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இவர்களின் 8 மாத குழந்தை அக்ஷ்யா குயினை, ஏஞ்சலின் பெற்றோர் ரசல்ராஜ் - எப்சிபாய் ஆகியோர் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஏஞ்சலின் தங்கையான ரோஸ்பிளசி, நர்சிங் முடித்து கோவையில் பணியாற்றி வருகிறார். இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவசங்கரன் என்ற இளைஞர் நீண்ட நாளாக ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு சிவசங்கரன், ரசல்ராஜ் வீட்டிற்குச் சென்று ரோஸ்பிளசியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிவசங்கரன் மீண்டும் இன்று அதிகாலை ரசல்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ரசல்ராஜ் வீட்டில் இல்லாமல் வெளியே சென்றுள்ளார். எப்சிபாய் மற்றும் இவரின் மற்றொரு பெண்ணும், குழந்தை அக்ஷ்யா குயினும் வீட்டிலிருந்தனர். சிவசங்கரன் அப்போது, ரோஸ்பிளசியை திருமணம் செய்ய வைக்க வேண்டும் எப்சிபாயிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெண் கொடுக்காத ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற இளைஞர் : நெல்லை அருகே நடந்த கொடூரம் !

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன், மறைந்துவைத்திருந்த கத்தியை எடுத்து எப்சிபாயை வெட்ட முயன்றுள்ளார். அப்போது திடீரென அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அக்ஷ்யாகுயின் மீது கத்திபட்டது. இதில் குந்தை துடிதுடிக்கச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பின்னர், சிவசங்கரன் எப்சிபாயை சரமாரியாகக் கத்தியால் வெட்டினார். அப்போது வெளியே சென்றிருந்த ரசல்ராஜ் வீட்டிற்கு வந்தபோது, கத்தியுடன் சிவசங்கரன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு சிவசங்கரன், ரசல்ராஜையும் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தம்பி ஓடிவிட்டார்.

பின்னர், அக்கம்பக்கத்தினர் ரசல்ராஜ் மற்றும் எப்சியாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எப்சியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை தலைமறைவாகியுள்ள சிவசங்கரனைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories