தமிழ்நாடு

“பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்?” : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என அப்பாவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்?” : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் 2018ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

“பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்?” : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

அதில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தானும், தி.மு.க நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், பொதுத்துறை செயலாளர் தன்னிச்சையாக செயல்பட முடியாது எனவும், அமைச்சரவை முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்பதால், அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரியாக கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவு
அப்பாவு

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்த மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories