நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் 5 ஆம் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
வருகிற 18 ந்தேதி காலை 9 மணி-சென்னை வடக்கு, மாலை 4 மணி-சென்னை வடகிழக்கு, 19 ஆம் தேதி காலை 9 மணி-சென்னை கிழக்கு, 19 ஆம் தேதி 4 மணி-சென்னை தெற்கு. 20 ஆம் தேதி காலை 9 மணி-சென்னை தென்மேற்கு. 20 ஆம் தேதி மாலை 4 மணி-சென்னை மேற்கில் நடைபெறும்.
காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 9 மணிக்கும்; மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 4 மணிக்கும் துவங்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.