தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா.. 17 பேர் பலி.. மொத்த பாதிப்பு 7.71 லட்சமாக உயர்வு! #CovidUpates

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா.. 17 பேர் பலி.. மொத்த பாதிப்பு 7.71 லட்சமாக உயர்வு! #CovidUpates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 64 ஆயிரத்து 377 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆண்கள் 958 பேருக்கும் பெண்கள் 666 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் 483 பேருக்கும், கோவையில் 140, செங்கல்பட்டில் 99, திருவள்ளூரில் 79, சேலத்தில் 77 ஈரோடு, காஞ்சிபுரத்தில் தலா 72, திருப்பூரில் 67, என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவால் இதுகாறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.71 லட்சத்து 619 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,904 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து மொத்தமாக குணமடந்தோரின் எண்ணிக்கை 7.47 லட்சத்து 752 ஆக உள்ளது. ஆகவே தற்போது 12 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories