தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ’கிடுகிடு’ உயர்வு... பொதுமக்கள் வேதனை!

சின்ன வெங்காயம் கிலோ ரூ100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ’கிடுகிடு’ உயர்வு... பொதுமக்கள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புதிய காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்பதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை ரூ. 40 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ. 65 ஆக உயர்ந்தது. ரூ.45க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் இன்று ரூ.70-க்கு என்று மொத்த விற்பனையிலே இந்த விலைக்கு விற்கப்படுகிற நிலையில் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ75 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்யபடுகிறது.

இதேபோன்று சந்தையில், ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.15-லிருந்து ரூ.20 வரையும், நவின் தக்காளி ரூ.22-ல் இருந்து ரூ.25 வரையும், கேரட் ரூ.65-லிருந்து ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.30-ல் இருந்து ரூ.40 வரையும், பீட்ரூட் ரூ.25-ல் இருந்து ரூ.30 வரையும் விற்கப்படுகிறது.

மேலும், சவ்சவ் ரூ.10-ல் இருந்து ரூ12 வரையும், முள்ளங்கி ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், வெண்டைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ 25 வரையும் , கத்திரிக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.25 வரையும், பாகற்காய் ரூ.20-ல் இருந்து ரூ25 வரையும், புடலங்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், கோவைக்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், சுரைக்காய் ரூ.15-ல் இருந்து ரூ.20 வரையும், முருங்கைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.30 வரையும், பச்சை மிளகாய் ரூ.20-ல் இருந்து ரூ.25 வரையும் , இஞ்சி ரூ.30-ல் இருந்து ரூ.50 வரையும், அவரைக்காய் ரூ.30-ல் இருந்து ரூ.35 வரையும் விலை உயர்த்தி விற்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories