தமிழ்நாடு

“பட்டியலின-பழங்குடியின மக்களின் பாதுகாவலராகச் செயல்பட்டவர் டாக்டர் பாலசிங்கம்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் சென்னை மாநகர மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பாவலர் வை.பாலசுந்தரம் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

“பட்டியலின-பழங்குடியின மக்களின் பாதுகாவலராகச் செயல்பட்டவர் டாக்டர் பாலசிங்கம்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் சென்னை மாநகர மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பாவலர் வை.பாலசுந்தரம் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சென்னை மாநகர மேயர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பாவலர் வை.பாலசுந்தரம் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டியலின- பழங்குடியின மக்களின் பாதுகாவலராக மும்முரமாகப் பணியாற்றி- சென்னை மாநகராட்சியிலும், தமிழக சட்டமன்றத்திலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளில் போராடியதோடு அவற்றை நிறைவேற்றவும் பாடுபட்டவர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மீது மாறாப் பற்று வைத்திருந்தவர்.

டாக்டர் வை.பாலசுந்தரம் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories