தமிழ்நாடு

விபத்தில் இறந்த கணவர் : மறுநாளில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : அதிர்ச்சியில் உறவினர்கள்!

நெல்லை அருகே கணவர் இறந்து போன மறுநாளே மனைவி மாரடைப்பால் இறந்து போன சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் இறந்த கணவர் : மறுநாளில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : அதிர்ச்சியில் உறவினர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர் வடகரையை பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி களஞ்சியம் அம்மாள். 70 வயதான அய்யாக்கண்ணு அங்குள்ள காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி அய்யாக்கண்ணு வேலை முடிந்து வீடு திரும்புகின்ற போது தனது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கணவரின் மறைவால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி களஞ்சியம் அம்மாள் கதறி அழுதுள்ளார். சோகத்தில் இருந்து மீளாத அவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்திலே களஞ்சியம் அம்மாள் இறந்து போனார்.

கணவர் இறந்து போன மறுநாளே மனைவி மாரடைப்பால் இறந்து போன சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories