தமிழ்நாடு

தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலி என சட்டப்பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார். 

தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலி என சட்டப்பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்.

தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு!

ஆகையால் நாங்குநேரி தொகுதி காலியானதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் 232 தொகுதிகள் உள்ளன.

எனவே, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories