விளையாட்டு

கோலியால் ஆப்கான் வீரர் நவீனை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. ரசிகர்களை நோக்கி நவீனின் செய்கையால் அதிர்ச்சி!

நேற்று நடைபெற்ற லக்னோ-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் லக்னோ வீரர் நவீன் உல் ஹாக் பந்து வீசும்போது கொல்கத்தா ரசிகர்கள் கோலி,கோலி என்று கத்தி அவரை வெறுப்பேற்றினர்.

கோலியால் ஆப்கான் வீரர் நவீனை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. ரசிகர்களை நோக்கி நவீனின் செய்கையால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

கோலியால் ஆப்கான் வீரர் நவீனை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. ரசிகர்களை நோக்கி நவீனின் செய்கையால் அதிர்ச்சி!

இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

கோலியால் ஆப்கான் வீரர் நவீனை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. ரசிகர்களை நோக்கி நவீனின் செய்கையால் அதிர்ச்சி!

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோலியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லக்னோ-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் லக்னோ வீரர் நவீன் உல் ஹாக் பந்து வீசும்போது கொல்கத்தா ரசிகர்கள் கோலி,கோலி என்று கத்தி அவரை வெறுப்பேற்றினர். மேலும் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போதும் ரசிகர்கள் கோலி,கோலி என்று கத்தினர்.

கோலியால் ஆப்கான் வீரர் நவீனை கடுப்பேற்றிய ரசிகர்கள்.. ரசிகர்களை நோக்கி நவீனின் செய்கையால் அதிர்ச்சி!

ஆனால் இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இதனிடையே கொல்கத்தா அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்த நிலையில், பீல்டிங் செய்து கொண்டிருந்த நவீன் ரசிகர்களை நோக்கி வாயை மூடுங்கள் என வாயில் கை வைத்து செய்கை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories