
தமிழ்நாட்டிற்கு, ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பெருமைக்குரியத் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று (செப்.15) ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், உலகளாவிய தமிழர்களும், அண்ணாவின் பெருமையை பறைசாற்றி வருகின்றனர்.
இதனையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!”






