அரசியல்

மீனவர்கள் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசு உணரவேண்டும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

“இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.”

மீனவர்கள் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசு உணரவேண்டும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் சிக்கலைப் போக்க பல்வேறு கடிதங்களும், கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்பட்டாலும், மீனவர் வஞ்சிப்பு தொடர்ந்து வருவதற்கு, பொருளாதார தீர்வு காணும் திட்டங்களை, தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ், அறிவிப்புகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.360 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள், ரூ.216.73 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.

மீனவர்கள் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசு உணரவேண்டும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.

எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories