உணர்வோசை

“டெல்லி அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு தி.மு.க செய்தது என்ன?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-4

வேதனைகளை மட்டுமே தமிழ்நாட்டுக்கு தந்த மோடி கேட்கிறார் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியால் என்ன நன்மை என்று?

“டெல்லி அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு தி.மு.க செய்தது என்ன?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-4
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!

தானும் செய்யமாட்டார், அடுத்தவர் செய்தாலும் பிடிக்காது என்ற ரகம் கொண்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஆள் தான் இந்த நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி!

அத்தகைய மாட்சிமை தாங்கிய நரேந்திரமோடி அவர்கள், ''காங்கிரசும் தி.மு.கவும் மத்தியில் பல ஆண்டுகள் கூட்டணியாக ஆட்சி செய்தன. ஆனால் என்ன சாதனைகளைச் செய்தன?" என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

மோடி அவர்கள் பிரதமராக இருக்கிறார். இந்தக் கேள்வியை மத்திய அரசின் அதிகாரிகளிடம் கேட்டிருந்தால் அவர்கள் பழைய கோப்புகளைப் பார்த்து உண்மை என்ன என்பதைச் சொல்லி இருப்பார்கள். ஆனால் எதுவும் தெரியாத பா.ஜ.கவினரைப் பார்த்து எதற்காக மோடி இப்படிக் கேட்க வேண்டும்?

பிரதமராக வி.பி,சிங், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன் ஆகியோர் இருந்தபோதெல்லாம் அந்தக் கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ளது. அப்போதெல்லாம் தமிழகத்துக்கு செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்வதாக இருந்தால் பல மணிநேரம் தேவைப்படும்.

இதே கேள்வியை சில மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது எழுப்பினார்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளைத் தொடக்கி வைக்கும் மேடையில் தான் அமித்ஷா இந்தக் கேள்வியைக் கேட்டார்.

மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே தி.மு.க - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தான்.

14 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்து 80 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டதே தி.மு.க - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தான்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்ன செய்தது தமிழ்நாட்டுக்கு என்று கேட்கும் மோடி அவர்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி, என்ன செய்யவில்லை என்பதுதான்!

* இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம்.

* மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

* இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தோம். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட்டன!

* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது.

* 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு , புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம் .

* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் .

* சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம் .

* 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

* 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.

* 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

* நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்

* 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

* அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

* 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி .

* சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

* திருச்சி , கோவை , மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

* சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.

* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

* கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின.

* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளிபூங்கா.

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதே போன்ற பட்டியலை மோடியால் வெளியிட முடியுமா?

அவரால் தமிழகத்துக்கு கிடைத்தது எல்லாம் என்ன?

* இந்தி திணிப்பு

* சமஸ்கிருத திணிப்பு

* தமிழ் புறக்கணிப்பு

* நீட் கொடுமை

* மூன்று வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கை பறிப்பு

* குடியுரிமை சட்டத்தின் மூலமாக சிறுபான்மையினருக்கு அச்சம்

*மாநில உரிமைகள் பறிப்பு

* நிதி உதவிகள் மறுப்பு

* ஜி.எஸ்.டி நிதி மறுப்பு

* பேரிடர் கால நிதி தர மறுப்பு

- அத்தனைக்கும் மேலாக எய்ம்ஸ் நாடகங்கள். குறைந்தபட்சம் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையையாவது மதுரையில் திறந்து வைத்து விட்டு மோடி வாய் வீரம் காட்டலாம். இது போன்ற வேதனைகளை மட்டுமே தமிழ்நாட்டுக்கு தந்த மோடி கேட்கிறார் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியால் என்ன நன்மை என்று?

“டெல்லி அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு தி.மு.க செய்தது என்ன?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-4

டெல்லி அதிகாரத்தை வைத்து தி.மு.க செய்த நன்மைகள் இந்திய நாட்டின் பிரதமர்களுக்குத் தெரியும். குடியரசுத் தலைவர்களுக்குத் தெரியும்!

''ஆதரிப்பதாக இருந்தாலும் எதிர்ப்பதாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர் முதல்வர் கலைஞர்" என்றார் பிரதமர் இந்திரா!

''பேரறிஞர் அண்ணா உருவாக்கிய உயர்ந்த மரபுகளை கையாண்டு வெற்றி பெற்றவர் கலைஞர்" என்றார் பிரதமர் சரண்சிங்!

''கொள்கைக்காக, இலட்சியத்துக்காக கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் கலைஞர்" என்றார் பிரதமர் வி.பி.சிங்!

''டெல்லியில் நான் பிரதமராக இருந்தாலும், சென்னை தான் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது" என்று சொன்னார் பிரதமர் தேவகவுடா!

'நலிந்த பிரிவு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக கலைஞர் போராடினார்" என்றார் பிரதமர் வாஜ்பாய்!

''தனது திறமையான நிர்வாகத்தால் தமிழகத்தை முன்னேற்றியவர் கலைஞர்" என்றார் குடியரசுத்தலைவர் வி.வி.கிரி.

''தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைக்கு வலிவு சேர்க்கும் விதமாக ஆட்சி நடத்தினார்" என்று பாராட்டினார் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்!

- இப்படி இந்தியாவின் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் அனைவரையும் தமிழகத்தை நோக்கி ஈர்த்த கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொல்லி அதன்படி நடந்து கொண்ட ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இன்றைய பழனிசாமி அண்ட் கோ போல மொத்தத்தையும் குத்தகைக்கு விட்டு காசு பார்க்கும் ஆட்சியை கழகம் நடத்தவில்லை!

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசோடு இணங்கிப் போகாது என்று இப்போது சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடுவோம். தமிழகத்துக்கு புறம்பானதை எதிர்ப்போம்.

நீட் தேர்வை எதிர்க்கும் தி.மு.க தான், எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் திறக்கவில்லை என்றும் கேட்கிறது. இந்த வேறுபாட்டை பா.ஜ.கவின் பாதம் தாங்கிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தி.மு.க அரசு உரிமை அரசாக இருக்கும். அடிமை அரசாக இருக்காது!

அடிமை அரசு முடிய, உரிமை அரசு உதயமாக ஆதரிப்பீர் உதயசூரியன்!

- தொடரும்...

Related Stories

Related Stories