மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

தூத்துக்குடியில் இன்று (1.5.2019) நடைபெற்ற மே தினப் பேரணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று கலந்து கொண்டார்.

தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக நேற்று (ஏப். 30 ஆம் தேதி) தூத்துக்குடி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்றாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

அதனைத்தொடர்ந்து இன்று (மே 1 ஆம் தேதி) தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சாலை- டூவிபுரம் 5 ஆவது தெரு சந்திப்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில் பேரணி புறப்பட்டு வி.வி.டி. சிக்னல், பாளையங்கோட்டை சாலை வழியாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பேரணி நிறைவுபெற்றது.

தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

பேரணியில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி , தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதா ஜீவன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்,முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பூங்கோதை,மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் தொமுச மாநில செயலாளர் சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் தொமுச, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories