இந்தியா

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை... பெட்ரோல் பங்குகளில் தீவிர கண்காணிப்பு அமல் !

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை... பெட்ரோல் பங்குகளில் தீவிர கண்காணிப்பு அமல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், பல்வேறு காரணங்களால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு பழைய வாகனங்கள் வெளியிடும் அதிகளவிலான கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணமாக திகழ்கிறது.

இதனால் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களும், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் இன்று முதல் தலைநகர் டெல்லியில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை... பெட்ரோல் பங்குகளில் தீவிர கண்காணிப்பு அமல் !

இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த டெல்லியில் உள்ள 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் போக்குவரத்து துறை, மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு காலாவதி ஆன வாகனங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.என்.ஜி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories