கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஊக்குவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி அ.மணி கேள்வி எழுப்பினார்.
அதில், எஸ்சி/எஸ்டி/ஓபிசி மாணவர்கள் அதிகமாக இருக்கும் கிராமப்புற மற்றும் தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?, பள்ளி மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து, சர்வதேச அளவில் பங்கேற்க அவர்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகள் மற்றும் பயிற்சியை வழங்குவதற்கான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களின் விவரங்கள் என்ன?,
நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க மாணவர்களுக்கு மேலும் அதிக வசதிகளை உருவாக்க ஒன்றிய அரசு வகுத்துள்ள புதிய திட்டங்கள் யாவை?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதேபோல், நடப்பு நிதியாண்டில் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மற்றும் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் திமுக எம்.பி.க்கள் செல்வம் ஜி மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதில், இந்தத் திட்டம் நாட்டின் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற சமூகங்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், கடந்த மூன்று ஆண்டுகளில் திறன் இந்தியா திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்ன?.
பயிற்சி பெற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகள், மேற்படி திட்டத்தின் வெற்றி விகிதத்தை மதிப்பிடுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு முறையின் விவரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் மேற்படி திட்டத்தின் தரம் மற்றும் செயல்திறனை அரசாங்கம் எவ்வாறு கண்காணிக்கிறது எனும் விவரங்கள் ஆகியவற்றை வெளியிடுமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.