இந்தியா

”காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்”.. மகாராஷ்டிர அமைச்சர் சர்ச்சை கருத்து!

காசு கொடுத்து வெங்காயம் வாங்க முடியாதவர்கள் நான்கு மாதங்களுக்கு வெங்காயத்தை சாப்பிடாமல் இருங்கள் என மகாராஷ்டிரா அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

”காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்”..  மகாராஷ்டிர அமைச்சர் சர்ச்சை கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு மழைப்பொழிவால் விளைச்சல் குறைந்தது. மேலும் மற்ற மாநிலங்களுக்கான வரத்தும் குறைந்து காணப்பட்டது.

ஆகையால், வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்ததால் இல்லத்தரசிகளின் கண்களில் வெங்காயத்தை உரிப்பதற்கு முன்பே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ பெட்ரோலுக்கு இணையாக ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

”காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்”..  மகாராஷ்டிர அமைச்சர் சர்ச்சை கருத்து!

இந்நிலையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் தடா பூஸ்"காசு கொடுத்து வெங்காயம் வாங்க முடியாதவர்கள் நான்கு மாதங்களுக்கு வெங்காயத்தை சாப்பிடாமல் இருங்கள்" என பேசியதுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories