இந்தியா

Twitter நிறுவனத்தை நடத்த எலான் மஸ்க்-க்கு உதவும் சென்னை இளைஞர் - யார் இவர் ?

பல முன்னணி ஊழியர்கள் பதவி இழந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை நடத்த எலான் மஸ்க்-க்கு சென்னை இளைஞர் ஒருவர் உதவி வரும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Twitter நிறுவனத்தை நடத்த எலான் மஸ்க்-க்கு உதவும் சென்னை இளைஞர் - யார் இவர் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு ட்விட்டரை ஒரு பிரச்சார கருவியாகப் பலரும் பயன்படுத்தினர்.

சில மாதங்களாகவே உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகக் கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க் இடையே பிரச்சனை எழுந்தது.

Twitter நிறுவனத்தை நடத்த எலான் மஸ்க்-க்கு உதவும் சென்னை இளைஞர் - யார் இவர் ?

இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாக்குவரா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுபுள்ளிவைத்துள்ளார் எலான் மஸ்க. ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தை உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்டால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முன்னணி ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எலான் மாஸ்க்கு ட்விட்டர் நிறுவனத்தை நடத்துவதில் சென்னை இளைஞர் ஒருவர் உதவி செய்து வருவது தெரியவந்துள்ளது. தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்துவரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் சென்னையின் பிறந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்றவர் அங்கு கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஸ்னாப் சாட் போன்ற நிறுவனத்தின் பணியாற்றிய இவர், தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறார். இது குறித்து ட்விட்டர் மூலம் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதில் ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories