இந்தியா

இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்த பட்டியலின மருத்துவர்:உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. ஒடிசாவில் அதிர்ச்சி!

இறந்த கூலித்தொழிலாளியின் உடலை பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் பிரேதப்பரிசோதனை செய்ததால் அவரது உடலை உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வாங்க மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்த பட்டியலின மருத்துவர்:உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. ஒடிசாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முச்சுனு சந்தா. கூலித்தொழிலாளியான இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலயில், இவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அந்த உடலுக்கு பிரதேப்பரிசோதனை செய்தார்.

இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்த பட்டியலின மருத்துவர்:உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. ஒடிசாவில் அதிர்ச்சி!

பின்னர் அவரது உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த உடலுக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் பிரதேப்பரிசோதனை செய்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின்னர் கிராம மக்களும் உறவினர்களும், முச்சுனு சந்தாவின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கிராம பஞ்சாயத்து பெண் தலைவரின் கணவர் சுனில் பெஹரா என்பவர் ஆம்புலன்ஸை வரவழைத்து முச்சுனுவின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்தார். ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சரியில்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்த பட்டியலின மருத்துவர்:உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. ஒடிசாவில் அதிர்ச்சி!

அதனைத் தொடர்ந்து, சுனில் பெஹரா, தனது பைக்கில் முச்சுனுவின் உடலை கட்டிக் ெகாண்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் உதவியுடன் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அங்கு உடலை தகனம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories