இந்தியா

12 வயது சிறுமியைக் கடத்தி சென்ற இளைஞர் - தனியாக சென்று மகளை மீட்ட தந்தை : மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பை பாந்தரா பகுதியில் கடத்தப்பட்ட 12 வயது மகளை மீட்ட தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

12 வயது சிறுமியைக் கடத்தி சென்ற இளைஞர் - தனியாக சென்று மகளை மீட்ட தந்தை : மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மும்பை பாந்தரா பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 12 வயது சிறுமி அருகில் உள்ள கடைக்குச் சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை என்றது உடனே காவல்நிலையத்திற்குச் சென்ற பெற்றோர் சிறுமியை காணவில்லை எனப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதேபகுதியில் உள்ள கார்மெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாஹித் கான் 24) சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமிக்கு சாஹித் கான்னை முன்பே தெரியும் என்பதால் சிறுமி சென்றிருக்கலாம் என போலிஸார் சந்தேகித்தனர்.

இந்நிலையில் போலிஸார் ஒருபக்கம் விசாரணையை தொடங்க, சிறுமியின் தந்தை சாஹித் கான் தங்கியிருந்த கார்மெண்டில் விசாரித்துவிட்டு, மும்பையில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்திற்குச் சென்றார்.

அங்கே அத்ரோலி என்ற கிராமத்தில் சிறுமியை கடத்திச் சென்றதைக் கண்டுபிடித்துள்ளார். பின்னர் மும்பை போலிஸார் அளித்த முதற்கட்ட தகவலின் படி, உ.பி போலிஸார் அலிகரில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் தப்பியோடிய சாஹித் கான்னை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories