இந்தியா

மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரை விட்ட நடன கலைஞர்.. ரசிகர்கள் கண்முன்னே நடந்த சோக சம்பவம்!

ஜம்மு காஷ்மீரில் மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரை விட்ட நடன கலைஞர்.. ரசிகர்கள் கண்முன்னே நடந்த சோக சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடனம் அடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். முதலில் அனைவரும் அவர் விழுந்தது நடனத்தின் ஒரு பகுதி என நினைத்துள்ளனர். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் அப்படியே இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த மற்ற கலைஞர்கள் அவரின் அருகே சென்று பார்த்தபோது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரை விட்ட நடன கலைஞர்.. ரசிகர்கள் கண்முன்னே நடந்த சோக சம்பவம்!

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories