இந்தியா

ஒரே நாளில் 96,423 பேர் பாதிப்பு; 1,174 பேர் பலி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் மோடி அரசு

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 96,423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 96,423 பேர் பாதிப்பு; 1,174 பேர் பலி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் மோடி அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 30,351,589 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 950,555 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதேப்போல், உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,874,596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 202,213 பேர் பலியாகினர்.

ஒரே நாளில் 96,423 பேர் பாதிப்பு; 1,174 பேர் பலி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் மோடி அரசு

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 96,423 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,18,254 லிருந்து 52,14,677 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில்1,174 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 83 84,372 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 41.12 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில், 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 10 லட்சத்து 9,976 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் 96,423 பேர் பாதிப்பு; 1,174 பேர் பலி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் மோடி அரசு

முன்னதாக, இந்தியாவில் 6 கோடியே 5 லட்சத்து 65 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 11 லட்சத்து 36 ஆயிரத்து 613 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகளை 4 மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால் தினந்தோறும் ஆயிரமாயிரம் பேரை கொரோனாவுக்கு இரையாகியிருக்க மாட்டார்கள் என மத்திய மோடி அரசின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories