இந்தியா

“நன்றி கேப்டன் கூல்... உங்கள் அடுத்த இன்னிங்சுக்கு வாழ்த்துக்கள்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் !

கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“நன்றி கேப்டன் கூல்... உங்கள் அடுத்த இன்னிங்சுக்கு வாழ்த்துக்கள்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மகேந்திர சிங் தோனி, கடந்த 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார்.

தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஜூலை 9ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி 50 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி.

அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்று செய்திகள் வெளிவந்தன. கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத சூழலில் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னைக்கு வந்துள்ள சூழலில் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் தோனி. தோனியி இந்த அறிவிப்பைத் தொடர்ந்த் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தோனியை பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது; சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான உங்கள் அடுத்த இன்னிங்சுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories