இந்தியா

“கொடூரமாக விவசாயப் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகள்” : 27 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிகப்பெரிய தாக்குதல்!

விவசாயப் பயிர்களை உண்ணும் வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் அம்மாநில விவசாயிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.

“கொடூரமாக விவசாயப் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகள்” : 27 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிகப்பெரிய தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விவசாயப் பயிர்களை உண்ணும் வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவை நாட்டின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துவதாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். அதுமட்டுமின்றி இது 27 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள், மரங்களை அழித்த பாலைவன வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்கின் தொகுதியான புத்னியின் செஹோரில் நுழைந்துள்ளன. முன்னதாக நீமுச் மாவட்டத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் மால்வா நிமரின் பகுதிகளுக்குச் சென்று தற்போது போபாலுக்கு அருகில் உள்ளன.

பாலைவன வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மாநில வேளாண் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. அதில், டிரம்ஸ் போன்று உரத்த ஒலிகளைப் எழுப்புங்கள். பாத்திரங்களை ஓங்கித் தட்டுங்கள், கூச்சலிடுங்கள் இதன் மூலம் தானியங்களை பாதுகாக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.

வெட்டுக்கிளிகளின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும். டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இரசாயன ஸ்ப்ரேயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்கிளிகளை உணவு தானியத்தை அழிப்பதை தடுக்க முடியும்.

வெட்டுக்கிளிகளை உரிய முறையில் தடுக்காவிட்டால் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்களை அழித்துவிடும். காய்கறிகள், பழங்கள், நாற்றுகளைக் கூட வெட்டுக்கிளிகள் தாக்கும். குறிப்பாக பருத்தி, மிளகாய் நாசமடைந்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமேற்படும். ராஜஸ்தான் தொடங்கி உத்தர பிரதேசம் வரை பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories