இந்தியா

முக்கிய வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கேரள தலைமை நீதிபதியாக நியமனம் - ஜனாதிபதி உத்தரவு!

முக்கிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமாரை,  கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கேரள தலைமை நீதிபதியாக நியமனம் - ஜனாதிபதி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமாரை, கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் காலியான கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மணிக்குமாரை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம், பரிந்துரைத்திருந்தது.

கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி மணிக்குமாரை, கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணைச் செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.மணிக்குமார் 2009ல் நிரந்தர நீதிபதியானார். இவர், நீர்நிலை ஆக்கிரமிப்பு, கட்டாய ஹெல்மட் அமல், மழைநீர் சேகரிப்பு போன்ற விவகாரங்களில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories