இந்தியா

மாணவிகளை சீரழித்ததாக பாலியல் வழக்கு : பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது!

பா.ஜ.க முன்னாள்அமைச்சர் சின்மயானந்தா பல மாணவிகளைச் சீரழித்துள்ளார் என்று அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் சின்மயானந்தாவை கைது செய்துள்ளனர்.

மாணவிகளை சீரழித்ததாக பாலியல் வழக்கு : பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்தா. இவர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர், சின்மயானந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த மாதம் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வெளியான அடுத்த நாளே மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த மனைவி ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி உத்தர பிரதேச காவல்துறை ஐ.ஜி நவீன் அரோரா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினர் புகாரளித்த மாணவி தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் சோதனை நடத்தி, அந்த அறைக்கு சீல் வைத்தனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் அந்தப் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான 43 வீடியோக்களை சிறப்பு விசாரணைக் குழுவிடம் பெண்ணின் தந்தை வழங்கினார். சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வீடியோக்கள் மற்றும் தகவல்களை தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் வழங்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் கசிந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவி தொடர்ந்த வழக்கை அடுத்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கையை அடுத்து சின்மயானந்தாவை போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories