இந்தியா

துப்பாக்கியால் சுட்டு தன் குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபர் : தொழில் நஷ்டம் காரணமா என போலிஸ் விசாரணை

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு தன் குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபர் : தொழில் நஷ்டம் காரணமா என போலிஸ் விசாரணை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவின் மைசூரில் உள்ள சாம்ராஜ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்ராஜ் நகரின் குண்டல்பேட் பகுதியில் உள்ள நந்தி லாட்ஜில் மைசூரைச் சேர்ந்த ஓம்கர் ப்ரசாத் என்பவர் தனது மனைவி, 5 வயது ஆண் குழந்தை மற்றும் அவரது பெற்றோரை துப்பாகியால் சுட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சாம்ராஜ் நகர் போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், கடன் தொல்லை காரணமாகவும் மைசூரு பகுதியை விட்டு வெளியேறிய ஓம்கர் ப்ரசாத்தின் குடும்பத்தினர் சிறிது நாட்கள் பந்திபூரில் உள்ள பண்ணைவீட்டில் தங்கியிருக்கிறார்கள்.

துப்பாக்கியால் சுட்டு தன் குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபர் : தொழில் நஷ்டம் காரணமா என போலிஸ் விசாரணை

அதன் பின்னர் 3 நாட்கள் கழித்து குண்டல்பேட்டில் உள்ள நந்தி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய அவர்கள், தன்னுடன் வந்த கார் டிரைவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதனையடுத்து, இன்று (ஆக.,16) அதிகாலை 3.30 மணியளவில் ஓம்கர் தனது மனைவி நிகிதா, மகன் ஆர்ய கிருஷ்ணா, பெற்றோர் நாகராஜ் பட்டாச்சார்யா, ஹேமலதா ஆகியோரை முதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதன் பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருப்பார் என போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஓம்கர் மற்றும் குடும்பத்தினர் தங்கியிருந்த அறையில் தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கிடைக்காததால், தற்கொலை தொடர்பாக தீர விசாரிப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என சாம்ராஜ் நகர் எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் மற்றும் தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories