தேர்தல் 2024

”சர்வாதிகார பா.ஜ.க அரசை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள்” : கே.சிவேணுகோபால்!

சர்வாதிகார பா.ஜ.க அரசை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

”சர்வாதிகார பா.ஜ.க அரசை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள்” : கே.சிவேணுகோபால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கு கடும் போட்டி நிலவுகிறது. மேலும் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்துள்ளதால் இந்த தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சர்வாதிகார பா.ஜ.க அரசை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள கே.சி.வேணுகோபால், " இந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

வட இந்தியாவில், ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லி, பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். இங்கும் பா.ஜ.க தோல்வியடையும்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பா.ஜ.கவிற்கு ஆதரவாக வேலை செய்கின்றன. இந்த அமைப்புகளை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றனர்.

மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலை வகிக்க தவறிவிட்டது. பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சு மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பிறகும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்ட வருகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories