தேர்தல் 2024

சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!

சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. நாளை (மே 20) 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர்.

மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் பாஜக தனது எல்லைகளை மீறியும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உ.பியில் இளைஞர் ஒருவர், பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்து, அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.

சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதிக்கு 4-ம் கட்ட தேர்தலின்போது (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புத் போட்டியிடுகிறார். கடந்த 2014, 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில் ஃபரூக்காபாத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பாஜக வேட்பாளர் முகேஷுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்துள்ளார். இதனை அவரே வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஒவ்வொரு முறையும் வாக்களிக்கும்போது அதனை தனது விரலால் எண்ணிக்கொண்டே வாக்கு இயந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.

சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!

மேலும் அந்த வீடியோவில் வெவ்வேறு சட்டை அணிந்தும் வருகிறார். ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் இதுபோன்று கள்ள ஓட்டு போட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் பாஜகவின் ஊழலை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு இருப்பதை அறிந்த பாஜக, இதுபோன்ற இழி செயலை செய்து வருகிறது.

இது போன்ற சம்பவத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே தேர்தல் விதிகளை மீறி மோடி பேசும் வெறுப்பு பேச்சுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மோடி உள்பட பாஜகவினரின் வெறுப்பு பேச்சு, அவதூறு பரப்புவது போன்ற செயலை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!

இந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது சமூக வலைதள பக்கத்தில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்பது மீண்டும் நிரூபனமாகும்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, "இந்த இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கிறார்.. இப்போதாவது தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளது. இந்த சம்பவத்துக்காவது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முன்னதாக மே 7-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவின்போது குஜராத்தில் பாஜக நிர்வாகியின் மகன் விஜய் பபோர், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள், மக்களை மிரட்டி தனது கட்டுக்குள் கொண்டு வந்து, பின்னர் அங்கிருந்த மக்களை விரட்டி அவர்களுக்கு பதிலாக பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்டுள்ளார். இதனை அவரே லைவாக வீடியோ வெளியிட்டதையடுத்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதிக்கு மே 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories