தேர்தல் 2024

ஓட்டுக்காக இப்படியா... மோடியின் சமீபகால பொய்கள்... பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!

ஓட்டுக்காக இப்படியா... மோடியின் சமீபகால பொய்கள்... பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. சரி சொன்னதைதான் செய்யவில்லை என்றால், சொல்லாத விலைவாசி உயர்வை செய்துள்ளது மோடியின் பாஜக அரசு. சிலிண்டர் முதல் GST வரை என ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்கு பெரும் துன்பங்களை மட்டுமே பாஜக அரசு கொடுத்து வருகிறது.

இது மட்டுமில்லாமல் மதத்தை வைத்து மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்வதில் முனைப்பும் காட்டி வருகிறது. மேலும் நாடு முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு பச்சோந்திபோல் அந்த இடத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறார் மோடி. அதுமட்டுமின்றி, பொய்... எதற்கெடுத்தாலும் பொய் மட்டுமே உரைத்து வருகிறார்.

இதில் என்ன வேடிக்கை என்றால், அவர் பொய் கூறுவது அனைவருக்கும் தெரியும் என்பது அவருக்கே தெரியும். இருந்தாலும் தனது பொய்யை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே வருகிறார். அண்மையில் கூட மோடி சுட்ட வடைகள் என்று ட்ரெண்டானது. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமின்றி பொய்களையும் தொடர்ந்து கூறி கொண்டே வருகிறார்.

ஓட்டுக்காக இப்படியா... மோடியின் சமீபகால பொய்கள்... பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!

இந்த நிலையில் மோடியின் பொய்களுக்கு எல்லையில்லாமல் போனதோடு, தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என்று பேசி மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மோடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் மோடியின் சமீப கால பொய்களை பட்டியலிட்டு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

பொய் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை உருவாக்கியவர் பிரதமர் மோடி.

மோடியின் சமீபகால பொய்கள் :

* 15% நாட்டின் வளத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது.

* ஒடுக்கப்பட்ட மக்களின் காவலன் இந்த மோடி. அந்த மக்களின் உரிமைகளை பறிக்க விடமாட்டேன்.

* இந்து - முஸ்லிம் என நான் அரசியல் செய்வதில்லை. அப்படி அரசியல் செய்தால், நான் பொதுவாழ்வில் இருக்கவே தகுதியில்லாதவன்.

* காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தி ராமர் ஆலயம் இல்லாமல் போய்விடும். ராமர் மீண்டும் கூடாரத்திற்கு சென்றுவிடுவார்.

* காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்குள் புல்டோசர் செல்லும்.

* குடியுரிமை அற்றவர்கள் வாக்கு வங்கிக்குள் வராததால் அவர்களைப் பற்றி காங்கிரசுக்கு கவலையில்லை.

ஓட்டுக்காக இப்படியா... மோடியின் சமீபகால பொய்கள்... பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!

* தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால், மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50% குறைந்துவிடுகிறது.

* நாட்டில் வாக்கு ஜிஹாத் தொடருமா? அல்லது ராமராஜ்யம் தொடருமா என்பதை முடிவு செய்யுங்கள்.

* காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீது அன்பும், நமது ராணுவத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

* தோல் நிறத்தை வைத்தே குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தோற்கடிக்க முனைந்தது.

* தேர்தல் அறிவித்ததில் இருந்து அதானி, அம்பானி குறித்து விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது. அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் அவர்களிடம் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என்ற பொய்யான செய்தியை பரப்பியுள்ளார் மோடி.

* காங்கிரஸ் கட்சி, பாபர் மசூதி பூட்டை ராமர் கோயிலுக்குப் போட்டுவிடும் .

* இந்து மதத்தின் நம்பிக்கையை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் சதி திட்டம் தீட்டி வருகிறது.

* நான் உயிருடன் இருக்கும் வரை இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிக்க விடமாட்டேன்.

* நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு.

ஓட்டுக்காக இத்தனை பொய்கள்.

banner

Related Stories

Related Stories