தி.மு.க

திருச்சியில் அண்ணா, கலைஞர் சிலை : திறந்து வைத்தார் தலைவர் மு.க.ஸ்டாலின்!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் மற்றும்அண்ணா திருவுருவச் சிலைகளை இன்று திறந்து வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில் அண்ணா, கலைஞர் சிலை : திறந்து வைத்தார் தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவச் சிலைகளை இன்று திறந்து வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் முன்னிலையில், தலைவர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளைத் திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சிலை திறப்பு விழாவில் முரசொலி நிர்வாக ஆசிரியர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு எம்.எல்.ஏ, ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் எம்.பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் நூறாவது பிறந்ததினத்தையொட்டி இன்று காலை அன்பில் கிராமத்தில் அவரது சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories