சினிமா

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இந்த முறையும் ஏமாற்றம் : தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு !

நடிகர் தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகவில்லை. அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இந்த முறையும் ஏமாற்றம் : தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனனுடன் முதன் முறையாக இணைந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், திரைப்படம் பல ஆண்டுகள் ரிலீசாகாமல் இருந்து வந்தது.

கடந்து இரண்டு வருடங்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ரிலீசாகாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் கெளதம் மேனன், தனுஷ் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,“எனை நோக்கி பாயும் தோட்டா'' படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையாவது படம் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' திரைப்படம் இன்று வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியபோது, ‘இன்று வெளியாகவிருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை வெளியிட பெரும் முயற்சிகள் பல செய்தும் வெளியிட முடியவில்லை என்றும், இதனை பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருவதாகவும் மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதுவரை ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை என்றும், ரசிகர்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories