சினிமா

சூர்யாவின் அடுத்த படத்திற்கு வசனம் எழுதும் விஜய் !

அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து 2016 ல் வெளியான படம் ‘உறியடி’.நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு வசனம் எழுதும் விஜய் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து 2016 ல் வெளியான படம் ‘உறியடி’.அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சூர்யா பேசும்போது ‘படக்குழுவினர் இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் விஜயகுமாரை முதன்முறை சந்தித்தபோதே அவரது உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.

எனக்காக என் அப்பா ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதைகூட கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.

சூர்யாவின் அடுத்த படத்திற்கு வசனம் எழுதும் விஜய் !

அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘உறியடி’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான விஜய்குமார் தான் வசனம் எழுதுகிறார்.சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories